விஜய் மல்லையா விவகாரம் : சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்

தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் செல்லுவதற்கு முன்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் சொல்லி விட்டு தான் புறப்பட்டார் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையா விவகாரம் : சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்
x
டுவிட்டர் வலைப்பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள சுவாமி, 2015 ம் ஆண்டு, நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், அப்போது லண்டன் செல்லும் தகவலை மல்லையா ஜெட்லியிடம் தெரிவித்து விட்டு புறப்பட்டார் என்றும்  குறிப்பிட்டு உள்ளார். மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால் விஜய் மல்லையா மீது இருந்த "லுக் - அவுட் " நோட்டீஸ் தளர்த்தப்பட்டு 54 பரிசோதிக்கப்பட்ட பயண பொருட்களை எடுத்து சென்றதாகவும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட இந்த கருத்து, புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்