அரசு விவகாரங்களின் போது இந்தியை பயன்படுத்த வேண்டும் - நரேந்திர மோடி

31-வது மத்திய இந்தி குழுவின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது.
அரசு விவகாரங்களின் போது இந்தியை பயன்படுத்த வேண்டும் - நரேந்திர மோடி
x
31-வது மத்திய இந்தி குழுவின் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேச மாநில முதலமைச்சர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, அதிகாரிகள் அரசு அலுவலக உபயோகங்களுக்கு இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என்று  அறிவுரை வழங்கினார். 

அரசின் இந்தி மொழி பயன்பாட்டுக்கும், சமூகத்தின் இந்தி மொழி பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் எனவும்  பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தி உள்பட அனைத்து இந்திய மொழிகள் மூலமும் உலகத்துடன் இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்