தமிழகத்தை போல் நம்மை நாமே ஆளுவோம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சு

டெல்லி தலைமையிடம் சரணடையாமல், தமிழகத்தை போல் நம்மை நாமே ஆள வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை போல் நம்மை நாமே ஆளுவோம் - தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பேச்சு
x
தெலங்கானாவில் உள்ள ரங்காரெட்டி பகுதியில், ஆளும்  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்  பொதுக் கூட்டம், நடைபெற்றது. இதில் பேசிய  சந்திரசேகர ராவ், சட்டப் பேரவையை தான் முன்கூட்டியே கலைப்பது குறித்து எந்த முடிவை எடுத்தாலும் முன்னதாகவே  தொண்டர்களுக்கு தெரிவிப்பேன் என்றார். 

தமிழகத்தில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலைவர்களே ஆட்சியில் இருப்பது போல், தெலங்கானாவையும் நம்மை நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்