விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் - ஸ்டாலின் கண்டனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாருக்கு கொலை மிரட்டல் - ஸ்டாலின் கண்டனம்
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கபூர்வமாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு  அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தை ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்வதுடன், ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்