விஜயபாஸ்கர் மீதான புகார், சிபிஐ விசாரணை தேவை - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
விஜயபாஸ்கரின் சென்னை அரசு இல்லத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள இல்லத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையை சுட்டிக்காட்டி உள்ளார்.
ஊழல்கள் மூலம் கோடிக்கணக்கில் சொத்து குவித்தது குறித்தும், இயற்கை வளக்கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை புகார் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை, உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Next Story