கருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

கருணாநிதியால் வளர்க்கப்பட்டதால், சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி வழியில் நடப்போம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய உள்ளதாகவும், கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டதால் சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மரணத்திற்கு பிறகும் கருணாநிதி நடத்திய சட்டப் போராட்டமும் அதில் அவர் பெற்ற வெற்றி, சரித்திர சாதனை என்றும் கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி வழங்கிய ஆற்றலை கொண்டு கட்சியை கட்டிக்காக்கும் பொறுப்பை துணிந்து ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அவரது அன்பு உடன்பிறப்புகள் உள்ளவரை தமக்கு கவலையில்லை என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.தந்தை பெரியாரின் ஒளியில், அண்ணா காட்டிய நெறியில் கருணாநிதி நடந்த வழியில் தொடர்ந்து நடை போட்டு, தொய்வின்றி செயல்படுவோம் என, தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, மதநல்லிணக்கம் காக்கும் கருணாநிதியின் லட்சியங்களை நிறைவேற்ற சூளுரைப்போம் என்றும் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்