பிரதமர் மோடிக்கு அளித்த பாதுகாப்பு ராகுல்காந்தி ஏன் தரப்படவில்லை?

பிரதமருக்கு அளித்த பாதுகாப்பு ராகுல்காந்திக்கு ஏன் தரவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி
பிரதமர் மோடிக்கு அளித்த பாதுகாப்பு ராகுல்காந்தி ஏன் தரப்படவில்லை?
x
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை சென்றார். கட்சி தொண்டர்களை நேரில் சந்தித்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு, முதல் தர பாதுகாப்பு தந்திருக்க வேண்டும் என, இளங்கோவன் கூறினார். மேலும் பிரதமர் மோடிக்கு தரப்பட்ட பாதுகாப்பு ஏன் ராகுல் காந்திக்கு அளிக்கப்படவில்லை என்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்