தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
x
தாது மணல் குவாரி முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க ஆட்சியில் தாது மணல் குவாரிகளில்  முறைகேடுகள் நடைபெற்றதாக வந்துள்ள விசாரணை குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

அரசு கஜானாவிற்கு ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத இழப்பை விசாரணை முடிவுகள், வெளிக் கொண்டு வந்துள்ளதாக அறிக்கையில் ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார். அணுசக்தி கழகங்களில் பயன்படுத்தும் மோனோசைட் விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பிற்கு விரோதமான முறைகேடுகள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

விசாரணை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என  வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், முதலமைச்சர் தவறும் பட்சத்தில் மத்திய அரசே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என  கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்