ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் சில அமைப்புகள் - தமிழருவி மணியன்

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார் ரஜினி எதிரலையை சாதகமாகப் பயன்படுத்த பார்க்கிறார் கமல்ஹாசன் மீது தமிழருவி மணியன் குற்றச்சாட்டு
ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் சில அமைப்புகள் -  தமிழருவி மணியன்
x
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பார்க்கிறார்
ரஜினி எதிரலையை சாதகமாகப் பயன்படுத்த பார்க்கிறார்
கமல்ஹாசன் மீது தமிழருவி மணியன் குற்றச்சாட்டு

மக்கள் போராட்டத்திற்கு ரஜினிகாந்த் எதிரானவர் என்பதைப் போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் 
கமல் ஈடுபட்டிருப்பதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் குற்றம் சாட்டியுள்ளார்

ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் சில அமைப்புகள்,  அவருடைய பிம்பத்தைத் திட்டமிட்டுச் சிதைக்க முற்படும் நேரத்தில் மறைமுகமாக அவர்களுக்கு 
கமலஹாசனும் உதவிக்கரம் நீட்டுவதாகவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலின் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக 
இனம் காணக்கூடும் என குறிப்பிட்டுள்ள
தமிழருவி மணியன், ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்தப் போராட்டத்திற்கும் எதிரி அல்ல என தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருப்பதாகவும், சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஒரு தலைமைக்குரிய நல் அடையாளம்
என்றும் அவர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்  குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்கப்  பார்ப்பது வருந்தத்தக்கது என்றும் தமிழருவி மணியன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்