நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 15வது தேசிய சிலம்ப போட்டி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 15வது தேசிய சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் 19 மாநிலங்களை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மினி சப்- ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு பிரிவுகளிலும் வயது மற்றும் எடை அளவுகளை கொண்டு போட்டிகள் நடந்தது. நெடுங்கம்பம், நடுகம்பம், இரட்டை கம்பம், வாள், சுருள் கத்தி உள்ளிட்ட 14 வகைகளில் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, சண்டை பிரிவு என போட்டிகள் நடந்தது. ஒட்டு மொத்த அளவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.