விளையாடி கொண்டிருந்த குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் - போராடி மீட்ட தீயணைப்புத்துறையினர்

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவனின் தலையில் பாத்திரம் சிக்கிய நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு...
x

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவனின் தலையில் பாத்திரம் சிக்கிய நிலையில் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அகற்றப்பட்டது. கோழிக்கோடு அருகே குதிர வட்டம் பகுதியைச் சேர்ந்த சஜீவ் குமார் என்பவரது 2 வயது மகன் அமர்நாத், விளையாடி கொண்டிருந்த போது, பாத்திரத்தை தலையில் மாட்டி கொண்டார்.

உடனடியாக கோழிக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இன்றி ஒரு மணி நேரத்தில் பாத்திரத்தை வெட்டி அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்