சினிமா செட்டில் பயங்கர தீ விபத்து | விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை

மும்பையில் சினிமா செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
x

மும்பையில் சினிமா செட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தேரியில் சினிமா செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த‌து. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் பத்திரமாக வெளியேறினர். தீ மளமளவென பரவியதால், செட் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த‌து. இதனால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து 10 வாகனங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை போராடி அணைத்தனர். இதில், ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்