பானிபூரி விற்க தடை - அதிரடி அறிவிப்பு - காரணம் என்ன?

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
x

பானிபூரி விற்க தடை - அதிரடி அறிவிப்பு - காரணம் என்ன?

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலாரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு காலாரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த‌து. அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ல‌லித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு போன்ற காலரா அறிகுறி தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள சுகாதார நலையத்திற்கு செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், விழிப்புடனும் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்