ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரம்...தேசியக் கொடியுடன் வலம் வரும் ஆர்பிஎஃப் வீரர்கள்

சுமார் 550 மாவட்டங்களை அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சுதந்திர தின விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர்...
x
  • 75 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் ஒரு லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
  • ஜூன் 21ம் தேதி தொடங்கிய இந்த இருசக்கர பேரணி நாட்டின் முக்கியமான 75 இடங்களுக்கு தொடர்ந்தது.
  • சுமார் 550 மாவட்டங்களை அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் சுதந்திர தின விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினர்.
  • இந்த பிரமான்ட பேரணியில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தேசப்பற்று குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
  • இந்த நிலையில் இன்று டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த இருசக்கர பேரணியை, ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கொடியசைத்து வரவேற்றார்.


Next Story

மேலும் செய்திகள்