ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
x
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜவுளி தொழில் எஸ்டேட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான  நூற்பாலைகள் உள்ளன. அங்குள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த தீயணைப்பு வீரர்கள் 5 வாகங்களின் சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டனர்.  ஆனால் அதிக அளவில் ரசாயன பொருட்கள் இருப்பு உள்ளதால் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. தீ அருகில் உள்ள நூற்பாலைகளுக்கு பரவாதவாறு தீயணைப்பு வீரர்கள் முயற்சி மேற்கொண்டனர்.  இன்று விடுமுறை தினம் என்பதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக  கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்