அதிகாரிகளை கொல்ல முயன்றதாக வழக்கு - நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

நடிகை பாலியல் துன்புறுத்தல் மற்றும் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 2-ஆம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
x
நடிகை பாலியல் துன்புறுத்தல் மற்றும் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 2-ஆம் நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு எதிராக நடிகர் திலீப் தலைமையில் 6 பேர் சதித்திட்டம் தீட்டியதாக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் திலீப் மீது கடுமையான பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம் நடிகர் திலீப்பிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அவரிடம் 2வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. திலீப் உள்ளிட்ட 5 பேரின் செல்போன் அழைப்பு விபரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்