துப்பாக்கிச் சூடு நடத்திய அமைச்சரின் மகன் -துப்பாக்கி சூடு இல்லை-வதந்தி பரப்புவதாக அமைச்சர் விளக்கம்

பீகார் சுற்றுலாத்துறை அமைச்சரின் மகன், பொது மக்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
பீகார் சுற்றுலாத்துறை அமைச்சரின் மகன், பொது மக்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தியதாக  தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. சாம்பரன் பகுதியில் காரில் சென்ற அவர், அங்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியதை பார்த்துள்ளார். அப்போது, அங்கு இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதில், பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். இருதரப்புக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அமைச்சரின் மகனை மீட்க வந்த போலீசாரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த விவகாரத்தில், முதலில் தனது மகன் தாக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தவே இல்லை என்றும் அமைச்சர் நாராயண் சிங் விளக்கமளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்