போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்கிய 6 பேர் கொண்ட மோசடி கும்பல் கைது

போலி கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை விற்ற 6 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
போலி கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை விற்ற 6 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே ரயில் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்  தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் வழங்கிய கும்பலையும், தடுப்பூசி செலுத்தியதற்கான போலி சான்றிதழ் வழங்கிய  கும்பலையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆர்டிபிசிஆர் சோதனை கருவிகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்