மகர விளக்கு பூஜைகள் நிறைவு - ஹரிவராசனம் பாடலுடன் சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றன
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றன. மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 15- ம் தேதி திறக்கப்பட்டது. கடந்த 14 தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைக்கப்பட்டது. இதையடுத்து மாளிகைபுரத்து அம்மன் கோயிலில் இரவு குருதி பூஜை நடத்தப்பட்டது. பின்னர் ஐயப்பன் கோயில் கருவறையின் சாவி முறைப்படி, பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 2021-2022 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெற்ற நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்