"கேரளாவில் மேலும் 54 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு"

கேரளாவில் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
x
கேரளாவில் புதிதாக 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, தொடங்கப்பட்டுள்ளது. மணக்காடு தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளியில் உள்ள தடுப்பூசி மையத்தை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 57 சதவீதம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, தெரிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும், கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 645ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்