"12-14 வயதினருக்கு தடுப்பூசி" - "எந்த முடிவும் எடுக்கவில்லை" - மத்திய சுகாதார அமைச்சகம்

12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
12 முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் மாதத்தில் 12 முதல்14 வயதுடையோருக்கு தடுப்பூசி இயக்கம் தொடங்கும் என்று கொரோனா தடுப்பு பணியின் தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் அரோரா கூறியதாக நேற்று தகவல் வெளியானது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்