உத்தரகண்ட் சட்டப்பேரவை - களத்தில் இறங்கிய பாஜக

உத்தரகண்ட் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட, கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகண்ட் சட்டப்பேரவை - களத்தில் இறங்கிய பாஜக
x
உத்தரகண்ட் மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட, கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்காது என தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த மாதம் 14 ம் தேதி ஒரே கட்டமாக உத்தரகாண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியில் உள்ள பாஜக இரண்டாவது முறையாக,  ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வரும்  22 ம் தேதி வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு அம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மக்களிடம், எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளது. செயல்பாடுகள் சரியில்லாத, மக்களின் அதிருப்தி அதிகமாக உள்ள எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க போவதில்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது. 18 முதல் 23 எம்எல்ஏக்கள் வரை மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்