"ஐ.நா சபையில் தமிழ் மொழியில் பேசியது"; "வாழ்க்கையின் மிகச்சிறந்த நாள்" - பிரதமர் மோடி பெருமிதம்

ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாளாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
ஐக்கிய நாடுகள் சபையில் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழியில் பேசியது வாழ்க்கையின் மிகச்சிறந்த நாளாக கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.செம்மொழி தமிழாய்வு மையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பேசிய பிரதமர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை வெவ்வேறு இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளில் மொழிமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பது வரவேற்கதக்கது என கூறினார். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்