குட்டி நாயைக் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை.. விடாமல் துரத்திய தாய் நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

குட்டி நாயைக் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை.. விடாமல் துரத்திய தாய் நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்
x
குட்டி நாயைக் கவ்விக் கொண்டு ஓடிய சிறுத்தை.. விடாமல் துரத்திய தாய் நாயின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று நாய்க்குட்டியைக் கவ்விக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரெகுவ அகோபிலம் என்ற கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு நாய் ஒன்று தனது குட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது மெதுவாக அங்கு வந்த சிறுத்தை குட்டி நாயை வாயில் கவ்விக் கொண்டு சென்றது. இதனை கண்ட தாய் நாய் சிறுத்தையை விடாமல் விரட்டிய நிலையில், சிறுத்தை மின்னலாக அங்கிருந்து தப்பிச் சென்றது. இக்காட்சிகள் கோவிலில் உள்ள சிசிடிவியில் பதிவான நிலையில், வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சிறுத்தையைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
 

Next Story

மேலும் செய்திகள்