திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்!

அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது.
x
அசாம் மாநிலத்தில், திருட சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கிச்சடி செய்து சாப்பிட்ட ருசிகர சம்பவம் வெளியாகி உள்ளது. 

ஹெங்ராபரி எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் உடைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். பின்னர் கொள்ளைக்கு நடுவே இரவு உணவுக்காக கிச்சடி செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அப்பகுதிவாசிகளை தகவல் கொடுத்து உஷார் படுத்தியுள்ளார். இதனால் மறைந்திருந்த கொள்ளையர்கள், வெளியே ஓடினர். உடனே பொதுமக்கள், தப்பியோடியவர்களை மடக்கி பிடித்து, திஸ்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கிண்டலாக அசாம் மாநில போலீசார், கிச்சடி உடம்புக்கு நன்மை தான் என்றாலும் திருட்டுக்கு இடையே கிச்சடி சமைப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்