புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 655 பேருக்கு கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
x
புதுச்சேரியில் மட்டும் 535 பேருக்கும், காரைக்காலில் 93 பேருக்கும், மாஹேவில் 27 பேருக்கும் என மொத்தம் 655 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரை ஒரு  ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 866 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்