நாடாளுமன்ற பணியாளர்கள் 402 பேருக்கு கொரோனா

400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஆயிரத்து 409  பணியாளர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 402 பேருக்கு இதுவரை  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் மக்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 200 பேர், மாநிலங்களவையில் பணியாற்றும் ஊழியர்கள் 69 பேர் மற்றும் அவை தொடர்பான இதர அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 133 பேர் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் மாதிரிகள் ஒமிக்ரான் தொற்றை கண்டறியும் மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அரசு வழங்கியிருக்கும் வழிகாட்டும் விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
==


Next Story

மேலும் செய்திகள்