"சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தவும்" - பாரத் பயோடெக்

15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
x
15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், சிறார்களுக்கு கோவாக்சினுக்கு பதிலாக மற்ற தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக தகவல்கள் வருவதாக கூறி உள்ளது. சிறார்களுக்கு, கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், சுகாதாரப் பணியாளர்கள் கோவாக்சின் மட்டும் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பாரத் பயோடெக் நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்