லாரி, கார் மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்து

பெங்களூருவில் லாரி, கார்கள் மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
லாரி, கார் மோதிக்கொண்ட சங்கிலி தொடர் விபத்து
x
பெங்களூரு மாநில நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியுள்ளது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்ற கார்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 கார்கள், ஒரு கண்டெய்னர் உள்ளிட்ட 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளது. கன்டெய்னர் லாரி டிரைவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கான காரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்