பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை - மகா மிருத்யுஞ்சய மந்திரம் ஓதும் பாஜகவினர்

பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக போபாலில் இன்று மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை உச்சரிக்க போவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
x
நேற்று பஞ்சாப் மாநிலத்திற்கு பயணம் செய்த பிரதமர், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக  நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ள நிலையில், பிரதமரின் பாதுகாப்புக்காக, மகா மிருத்தியுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க போவதாக சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். பிரதமரின் நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பிற்காக  பிராத்திக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்க மகாகாலேஸ்வரர் மற்றும் ஓம்காரேஷ்வரர் உள்ளிட்ட பெரும் சிவாலயங்களில், பிரதமரின் நீண்ட ஆயுளுக்காக மகா மிருத்தியுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க, அம்மாநில பாரதிய ஜனதா கட்சியினர் முடிவு செய்துள்ளனர். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானுக்குரிய மகா மிருத்யுஞ்சய மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்