மருத்துவமனை குடியிருப்பில் கொள்ளை..சிசிடிவியில் பதிவான கொள்ளை சம்பவம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பிற்குள் புகுந்து மருத்துவரின் பணப் பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குடியிருப்பிற்குள் புகுந்து மருத்துவரின் பணப் பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோரிமேடு பகுதியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் 
பிபிக் ஆனந்த் ஜின்டால்  வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் அதிகாலை 1 மணி அளவில் புகுந்த 3 திருடர்கள், வீட்டின் கதவை உடைத்து, மேஜையில் இருந்த பணப்பையில் இருந்து 2 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்