20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?

20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்த மோடி ! பாதுகாப்பு குறைபாடு ஏன் ?
x
பஞ்சாப்பில் நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்க சென்றபோது, போராட்டக்காரர்களின் சாலை மறியல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பாதி வழியில் பிரதமர் மோடி திரும்பியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பொரோஸ்பூர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் அரங்கத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தின்அருகே உள்ள மேம்பாலத்தை பிரதமரின் வாகனம் சென்று அடைந்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பயணத்தை ரத்து செய்த பிரதமர் பாதிவழியிலேயே விமானநிலையம் திரும்பினார். பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் மாநில அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தயார் செய்து வைக்காதது தொடர்பாக மாநில அரசு விளக்கம் அளிக்கும் படி மத்திய உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்