ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவரது மாதிரிகள் புனே பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் ஏற்கனவே கர்நாடகா மாநிலம் வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் ஒமிக்ரான் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்