புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்  தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அரசு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா தொழில் முனைவோர் சந்திப்பு  மற்றும்  கருத்தரங்கம் தனியார் விடுதியி   நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தராஜன், புதுச்சேரியில் விமான சேவையை துரிதப்படுத்த  மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறினார். ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கண்காணிக்க சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதுச்சேரியில் பொது இடங்களுக்கு வருவோரிடம் 2  தவணை தடுப்பூசி போட்டு கொண்டதற்கான ஆவணங்களை கேட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்