உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.
உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை
x
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை அடுத்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் தரப்பில், ஒமிக்ரான் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறைக்கான, நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், பிரதமரின் முதன்மை செயலாளர், விமானத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, உலகில் ஒமிக்ரான் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மற்றும் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கொண்ட நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்