பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து - பாஜக அலுவலகம் முன்பு பரபரப்பு

பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து - பாஜக அலுவலகம் முன்பு பரபரப்பு
x
பெண்கள் குறித்து சாதி ரீதியாக கருத்து தெரிவித்த மத்திய பிரதேச பாஜக அமைச்சருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மத்திய பிரதேசத்தின் உணவுத்துறை அமைச்சராக இருப்பவர் பிஷாஹுலால் சிங். இவர், மேம்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் வீடுகளிலே அடைந்து கிடப்பதாகவும், அவர்களை வீடுகளைவிட்டு வெளியில் இழுத்துவர வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கர்னி சேனா அமைப்பினர் போபாலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சரின் காரை முற்றுகையிட்டு கருப்புக் கொடி காட்டிய அவர்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்