ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு

ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு
x
ரூ.16,000க்கு துணி வாங்கிய பட்டதாரி இளம்பெண் - G-Pay வில் பணம் அனுப்புவது போல திருட்டு 

புதுச்சேரியில் துணிக்கடையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கிவிட்டு கூகுல் பே மூலம் பணம் செலுத்துவது போல ஏமாற்றிய பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி, குண்டுபாளையம் பகுதியை சேர்ந்த தணிகாசலம், காந்தி நகர் வழுதாவூர் சாலையில் துணிகடை நடத்தி வருகிறார். கடந்த 19 ஆம் தேதி இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணிகள் வாங்கி கொண்டு அதற்கான பணத்தை கூகுள்-பே செய்துவிட்டதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அந்த பணம் தனிகாசலத்தின் வங்கி கணக்கிற்க்கு வராமல் இருந்துள்ளது. இதே போல் அருகே திலாசுபேட்டை பகுதியில் அமைந்துள்ள மற்றொரு துணிகடையிலும் ஒரு பெண் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கி விட்டு கூகுல் பேயில் அனுப்புவது போல ஏமாற்றியதாக கூறப்படுகிறது.தன்வந்திரி போலீசார் இதுகுறுத்து வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த போது , இரண்டு கடையிலும் ஒரே பெண் தான் ஏமாற்றி சென்றிருப்பது தெரிய வந்த‌து. இதையடுத்து கதிர்காமம் பகுதியை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அனுசியாவை போலீசார் கைது செய்தனர். கணவர் விட்டு சென்றதால், வருமானம் ஏதும் இன்றி இதுபோல துணிகளை திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்த‌தாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story

மேலும் செய்திகள்