281 மாணவர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட மருத்துவக்கல்லூரி

கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
x
கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கல்லூரி மூடப்பட்டு, கட்டுப்பாட்டு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. 


தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால், கல்லூரி மூடப்பட்டு வெளிநோயாளிகள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வைரஸ் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்