"தேசத்திற்கு முதல் முன்னுரிமை அளிக்கும் பாஜக" - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் தங்களின் சுய நலத்தை எப்போதும் முன்வைப்பதாகவும் பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசத்திற்கு முதல் முன்னுரிமை அளிக்கும் பாஜக - பிரதமர் நரேந்திர மோடி
x
நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் தங்களின் சுய நலத்தை எப்போதும் முன்வைப்பதாகவும் பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டாவில் சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மூலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவர் என்றார். இந்திய விமான போக்குவரத்து துறை துரிதமான வளர்ச்சியை அடைந்து வருவதாக குறிப்பிட்ட பிரதமர் இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்குவதில் வேகத்துடன் உள்ளதாக கூறினார். உட்கட்டமைப்பு என்பது அரசியலுக்கான ஒரு அங்கம் அல்ல என்றும் அது தேசிய கொள்கையின் அங்கம் என குறிப்பிட்டார். நம் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் எப்போதும் தங்களது சொந்த நலனையே முன் நிறுத்துவதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். அவர்கள் எப்போதும் தங்கள் குடும்பத்தின் நலனை பற்றியே சிந்திப்பதாக புகார் தெரிவித்தார். பாஜக தேசத்திற்கே முதல் முன்னுரிமை என்கிற கொள்கையை  பின்பற்றுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்