டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் - மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம்

டிசம்பர் மாத இறுதிக்குள் சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் - மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம்
x
டிசம்பர் மாத இறுதிக்குள் சர்வதேச விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சர்வதேச பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது  இயல்பு நிலை திரும்புவதால் டிசம்பர் மாதத்திற்குள் சர்வதேச விமான சேவை நடைபெறும் என விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார். இதற்காக 25 நாடுகளுடன் நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஏர் இந்தியாவின் செயல்பாடுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியும் நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்