திட்டமிட்டு திடீர் தாக்குதல் நடத்தும் கும்பல் - கொச்சி, திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்

கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டமிட்டு திடீர் தாக்குதல் நடத்தும் கும்பல் - கொச்சி, திருவனந்தபுரத்தில் நடந்த கொடூரம்
x
கேரளாவில், திட்டமிட்டு கொடூரமாக நடத்தப்படும் திடீர் தாக்குதல்கள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொச்சியை சேர்ந்த அந்தோணி ஜான் என்பவர் பதிவிட்ட முகநூல் பதிவு, ஒரு சமூகத்தை தாக்கும்விதமாக உள்ளது என சர்ச்சையானது. அதைத் தொடர்ந்து, அவரது வீட்டுக்குச் சென்று பலவந்தமாக தூக்கி வந்த மர்மகும்பல், அங்கமாலி பகுதியில் வைத்து, ஆடைகளை களைந்து, நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த தாக்குதல் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இதேபோல், இருசக்கர வாகனத்தில் சென்ற திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மஸ்தான்அஜிஸ் என்ற இளைஞரை மடக்கிய மர்ம கும்பல், அவரை சுழற்றி சுழற்றி தூக்கி வீசியும், சுவற்றில் மோதியும் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தாக்குதல் கும்பலை தேடும் நிலையில், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்