சமூகவலை தளம் மூலம் காதல் - இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது

கேரளாவில், வாலிபர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.
சமூகவலை தளம் மூலம் காதல் - இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது
x
இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி மண்ணாங்கண்டத்தை சேர்ந்த ஷீபாவும்,
திருவனந்தபுரத்தை சேர்ந்த அருண்குமாரும்,
சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகிறார்கள். இருவரும் காதலித்துள்ளனர். ஷீபா திருமணமானவர் என்பதும் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதும் பின்னர் தெரியவந்தது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த இளைஞனை, ஷீபா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.  பின்னர் 2 லட்சம் ரூபாய் தருமாறு ஷீபா அருணை மிரட்டியதாக கூறப்படுகிறது. அது தொடர்பான விவரங்களைப் பேசுவதற்காக அந்த இளைஞனை, கடந்த 16 தேதி  அடிமாலிக்கு ஷீபா வரவழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ஷீபா மறைத்து வைத்திருந்த  ஆசிட்டை அருண் முகத்தில் ஊற்றியுள்ளார். இந்த தாக்குதலில் அருணின் ஒரு கண் பார்வை பறிபோனது.  இந்நிலையில் முறிக்காசேரியில் உள்ள கணவர் வீட்டில் பதுங்கி இருந்த ஷீபாவை அடிமாலி போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்