மழையில் அதிவேகமாக சென்றதால் விபத்து - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்

பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மழையில் அதிவேகமாக சென்றதால் விபத்து - 3 பேர் உயிரிழந்த பரிதாபம்
x
பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியதில் ஓட்டுநர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேற்கு வங்கத்தில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். சிக்கஜாலா என்ற இடத்தில் பரவலாக மழை இருந்த போதிலும் காரை வேகமாக இயக்கிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழக்க, சலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில், காரில் சென்ற பூர்ணிமா, லஷ்மி மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவரை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்