மும்பை ரயில் நிலையத்தில் பாட் அறைகள்... - சொகுசு அறைகளில் நவீன வசதிகள்
இந்தியாவிலே முதன் முறையாக மும்பை ரயில் நிலையத்தில் பாட் (Pod) அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலே முதன் முறையாக மும்பை ரயில் நிலையத்தில் பாட் (Pod) அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே டூரிசம் கார்ப்பரேஷன் மற்றும் அர்பன் பாட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து மும்பை ரயில் நிலையத்தில் கட்டமைத்த மலிவான 48 சொகுசு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, இன்டர்நெட் வசதி, குளியல் அறை, செக்கியூரிட்டி லாக்கர் என அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அறைகளில் தங்க ஒரு நபருக்கு 12 மணி நேரத்திற்கு 999 ரூபாய் எனவும், 24 மணி நேரத்திற்கு ஆயிரத்து 999 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் பயன்படுத்தும் அல்லது கேட்கும் வசதிக்கு ஏற்ப இந்த கட்டண தொகை மாறுபடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Next Story