பெங்களூரில் நடைபெற்ற "கிருஷி மேளா" - ரூ.1 கோடிக்கு ஏலம் போன கிருஷ்ணா காளை

பெங்களூரில் நடைபெற்ற கிருஷி மேளா எனப்படும் விவசாயக் கண்காட்சியில், மூன்றரை வயதான கிருஷ்ணா காளை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
பெங்களூரில் நடைபெற்ற கிருஷி மேளா - ரூ.1 கோடிக்கு ஏலம் போன கிருஷ்ணா காளை
x
பெங்களூரில் நடைபெற்ற கிருஷி மேளா எனப்படும் விவசாயக் கண்காட்சியில், மூன்றரை வயதான கிருஷ்ணா காளை 1 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. பெங்களூரில் உள்ள ஜிகேவிகே வளாகத்தில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரம்பரிய மாட்டினமாக ஹள்ளிகர் இனம் கருதப்படுகிறது. இதன் விந்தணுவானது அதிக விலைக்கு விற்கப்படும் நிலையில், வெறும் 1 டோஸ் மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஹள்ளிகர் இனத்தைச் சேர்ந்த இந்த கிருஷ்ணா காளையே ஏலத்தில் பங்கேற்றவர்களின் முதல் தேர்வாக இருந்த நிலையில், 1 கோடி ரூபாய்க்கு கிருஷ்ணா காளை ஏலம் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்