கேரளா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் - "சுற்றுலா மையங்கள் திறக்க தடை"

கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சூரில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் - சுற்றுலா மையங்கள் திறக்க தடை
x
கேரளா மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக  திருச்சூரில் உள்ள  சுற்றுலா மையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை பாதிப்பு  தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களோடு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பம்பை ஆற்றில்  பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த 3 தினங்களுக்கு சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் உத்தரவிட்டார். மேலும் இடுக்கி மாவட்டத்தில் இரவு நேரத்தில்  பயணம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,  சுரங்கம் மற்றும் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்