"அனைவருக்கும் வீடு வழங்கப்படும்" - மத்திய அரசு உறுதி- பிரதமர் நரேந்திர மோடி

நாட்டின் தொலைதூர மூலையில் உள்ளவர்களுக்கும் வீடுகள் கிடைக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வீடு வழங்கப்படும் - மத்திய அரசு உறுதி- பிரதமர் நரேந்திர மோடி
x
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் திரிபுராவில்  ஒரு லட்சத்து 47 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பயனாளிகளின்  வங்கிக் கணக்குகளில் 700 கோடி ரூபாய் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் சலுகைகளைப் பெறுவதில் எந்த ஒரு சாமானிய மனிதனையும் விட்டு விடக்கூடாது என்பதிலும், ஏழைகளின் பணம் இடைத்தரகர்களால் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெளிப்படையான முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் தொலை தூர மூலையில் உள்ளவர்களுக்கும் எந்தவிதமான பாரபட்சமும் இன்றி அனைவருக்கும் வீடுகள் கிடைக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்