"பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி" - பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறி உள்ளார்.
பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி - பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு
x
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக உள்ளிட்ட கட்சிகள், திட்டங்கள் அறிவிப்பு மூலம் தங்களுடைய நாடகத்தை தொடங்கி இருப்பதாக கூறினார். தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும், மக்களுடனான கூட்டணியே தங்களின் நிரந்தரக் கூட்டணி என்றும் அவர் கூறினார். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் பாஜகவிற்கும் எந்த வித்தியாசம் இல்லை என்று விமர்சித்த மாயாவதி, இரு கட்சிகளும் இந்து-முஸ்லிம்களைப் பிரித்து வாக்குகளாக மாற்றுவதாக கூறினார். காங்கிரஸ் அளித்து வரும் எந்த வாக்குறுதியையும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் மாயாவதி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்