மருத்துவமனையில் தீ விபத்து - 4 குழந்தைகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் தீ விபத்து - 4 குழந்தைகள் உயிரிழப்பு
x
போபாலில் உள்ள கமலா நேரு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் மாநில அமைச்சர் விஷ்வாஸ் சரங் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்