நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி எதிரொலி - இன்று கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

ஜே.பி.நட்டா தலைமையில், பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது.
நாடு முழுவதும் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி எதிரொலி - இன்று கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
x
பல்வேறு மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், பாஜக படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இன்று தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா,நிதின் கட்கரி, உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்தில், பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் கட்சியை வலுப்படுத்தவும் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்